விலகுகிறார் சோம்நாத்-புதிய சபாநாயகர் கிஷோர்?
ஆனால், இந்த விஷயத்தில் அவரை தாங்கள் நெருக்கப் போவதில்லை என்றும், இது குறித்து சோம்நாத் தான் முடிவெடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
இன்று ஜனாதிபதியிடம் ஆதரவு வாபஸ் கடிதத்தை அளித்துவிட்டு வந்த காரத்திடம், உங்கள் வாபஸ் கடிதத்தில் உள்ள எம்பிக்கள் பட்டியலில் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயரும் உள்ளதா என்று கேட்டதற்கு, எல்லா மார்க்சிஸ்ட் எம்பிக்களின் பெயரும் உள்ளது என்றார்.
இதன்மூலம் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை சாட்டர்ஜி உள்ளிட்ட அனைத்து இடதுசாரி எம்பிக்களும் விலக்கிக் கொள்வதாகவே அர்த்தமாகும்.
இதனால் சாட்டர்ஜி பதவி விலகுவார் என்றே கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அவர் அது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் விலகினால் புதிய சபாநாயகராக ஆந்திர மாநில எம்பியான கிஷோர் சந்திர தியோவை தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் ரிசர்வ் எம்பி தொகுதியில் வென்றுள்ள தியோ ஒரிஸ்ஸாவை பூர்வீகமாகக் கொண்ட மூத்த காங்கிரஸ் தலைவராவார்.
இவர், சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர்,
தமிழிலும் பேசக்கூடியவர்.