3வது அணி எதிர்த்து வாக்களிக்கும்- சமாஜ்வாடி இல்லை: தெலுங்குதேசம்
ஹைதராபாத்: மன்மோகன் சிங் அரசு லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோரினால், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி எதிர்த்து வாக்களிக்கும். சமாஜ்வாடி கட்சி தற்போது கூட்டணியில் இல்லை என்று தெலுங்கு தேசம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெலுங்கு தேசம் செய்தித் தொடர்பாளர் மைசூரா ரெட்டி ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக குடியரசுத் தலைவரிடம் சமாஜ்வாடி கட்சி கடிதம் கொடுத்துள்ளது. எனவே அந்த கட்சி தற்போது அணியில் இல்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாகத்தான் சமாஜ்வாடி கட்சியின் முன் முயற்சியில், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் அடிப்படையை தகர்க்கும் வகையில் சமாஜ்வாடி கட்சி நடந்துகொண்டுள்ளது. எனவே அந்த கட்சிக்கு கூட்டணியில் இடமில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு லோக்சபாவில் உடனடியாக நம்பிக்ைக வாக்கு கோரிதனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தற்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறுபான்மை அரசாகும்.
நம்பிக்கை வாக்கு ஓட்டெடுப்புக்கு வரும்போது ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளும், தெலுங்கு தேசமும் அதற்கு எதிராக வாக்களிக்கும்.
2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிபிஎம்முடன் தெலுங்கு தேசம் கூட்டணி வைக்கும் என்றார் ரெட்டி.












Click it and Unblock the Notifications