For Daily Alerts
Just In
பண வீக்கம் 11.89% ஆக உயர்வு!
டெல்லி: பணவீக்கம் 11.89 சதவீதமாக உயர்ந்துள்ளது. விரைவில் 13 சதவீதத்தை எட்டும் என நிதியமைச்ச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உணவு மற்றும் உற்பத்தி பொருட்களின் கடும் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத இந்த பண வீக்க உயர்வால் நிதியமைச்சகம் திக்கித் திணறி வருகிறது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் பண வீக்கம், முடிவடைந்த வாரத்தில் 11.89 சதவீதமாக உயர்ந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் இது 13 சதவீதமாக அதிகரிக்கும் என நிதியமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
Story first published: Friday, July 11, 2008, 14:30 [IST]