காஷ்மீர் சட்டசபை கலைப்பு-ஜனாதிபதி ஆட்சி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
அமர்நாத் கோயிலுக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மக்கள் ஜனநாயக கட்சி விலக்கிக் கொண்டது.
இதையடுத்து முதல்வர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் நம்பிக்கை வாக்கு கோருவதாக இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார் ஆசாத்.
இதையடுத்து மாற்று அரசு அமைக்கும் பலம் யாருக்கும் இல்லாததாலும், யாரும் அரசமைக்க முன்வராததாலும், சட்டசபையை கலைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று சட்டசபை கலைக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இதற்கான உத்தரவை ஆளுநர் என்.என். வோரா பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications