திருச்சி நுகர்வோர் நீதிமன்றத்தில் முக்கிய ஆவணங்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி நுகர்வோர் நீதிமன்றத்தில் முக்கிய வழக்கின் ஆவணங்கள் மாயமானது.
திருச்சி பாராதிதாசன் சாலையில் திருச்சி நுகர்வோர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு முறையற்ற வணிகத்தால் பாதிக்கப்படும் நுகர்வோர்கள் தங்களுக்கு பரிகாரம் தேடி நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நீதிமன்றத்தில் கடந்த இரண்டு மாதமாக முக்கியமான வழக்குகளின் ஆவணங்களை ஒவ்வொரு வழக்கு ஆவணமாக மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த தகவல் அறிந்த நீதிமன்ற ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சென்னை மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் வழக்கு தொடர்பான ஆவணங்கள் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications