சென்னையில் ரவுடிகளை ஒழிக்க தனிப்படை அமைப்பு
சென்னை: சென்னை மாநகரில் உலா வந்து கொண்டிருக்கும் முக்கிய ரவுடிகளின் கொட்டத்தை அடக்க வட சென்னை இணை ஆணையர் ரவி தலைமையில் ரவுடிகள் ஒழிப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையைக் கலக்கி வந்த பல பயங்கர ரவுடிகள் இறுதியில் போலீஸாரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியுள்ளனர். லேட்டஸ்டாக பாபா சுரேஷ் என்கிற ரவுடி நேற்று போலீஸ் என்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், சென்னை நகரை கலக்கி வரும் ரவுடிகளை ஒழிக்க தனியாக ரவுடிகள் ஒழிப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது. வட சென்னை இணை ஆணையர் ரவி இந்தப் படைக்குத் தலைமை தாங்குவார்.
இவரிடம் 450 ரவுடிகள் அடங்கிய பட்டியலை ஆணையர் சேகர் ஒப்படைத்து அவர்களை களையெடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த பட்டியலில் ரவுடிகளை ரக வாரியாக ஏ, பி, சி, ஏ பிளஸ் என பிரித்துள்ளனர். பிரபல ரவுடிகளான மாட்டு சேகர், பர்மா சீனு, நாகேந்திரன், ஜெர்மன் ரவி, காதுகுத்து ரவி உள்ளிட்ட 25 பேர் ஏ-பிளஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதாவது இவர்கள்தான் மிக பயங்கர ரவுடிகள்.
இந்தப் பட்டியலில் உள்ள ரவுடிகளைப் பிடித்து அவர்களது கொட்டத்ைத ஒடுக்க ரவுடிகள் ஒழிப்புப் படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications