நம்பிக்கை வாக்கெடுப்பு: எல்ஜி, செஞ்சிக்கு மதிமுக எச்சரிக்கை!
கோவை: நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சி கட்டுப்பாட்டை மீறினால் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரின் எம்.பி. பதவி பறிக்கப்படும் என அக் கட்சியின் நாடாளுமன்ற கொறாடா பொள்ளாச்சி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முன்பே அறிவித்து விட்டார்.
எனவே நாடாளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மதிமுக எடுக்கும். கட்சி முடிவுப்படி நாங்கள் வாக்களிப்போம்.
வைகோ தலைமையிலான மதிமுக தான் உண்மையானது என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. எங்கள் கட்சியின் பம்பரம் சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் எல். கணேசனும், செஞ்சி ராமசந்திரனும்.
இதனால் இவர்கள் நாடாளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பின் போது மதிமுக கொறாடா எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு வாக்களிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் பதவி பறிபோகும் நிலை உருவாகும் என்றார்.












Click it and Unblock the Notifications