For Daily Alerts
Just In
பெரம்பலூரில் மருத்துவக் கல்லூரி - இடம் தேர்வு
பெரம்பலூர்: பெரம்பலூரில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா பேசுகையில், பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்காக, பெரம்பலூர்- அரியலூர் நெடுஞ்சாலையில், ஓதியம் கிராமத்தில், 26 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் இங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கும். இன்னும் ஒரு வாரத்தில் இந்த நிலம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு மாற்றிக் கொடுக்கப்படும். அதன் பின்னர் மற்ற பணிகள் தொடங்கும் என்றார்.
Comments
Story first published: Monday, July 14, 2008, 12:56 [IST]