அமைச்சராக்கினால் ஆதரவு-சிபு சோரன் நிபந்தனை

இந்தக் கட்சியிடம் 5 எம்பிக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை வாக்கில் வெல்ல ஒவ்வொரு எம்பியின் ஓட்டும் மிக அவசியம் என்ற நிலையில் சோரன் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால் காங்கிரசி்ன் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
நரசிம்மராவ் ஆட்சியைக் காப்பாற்ற பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்தது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. இதையடுத்து பெரும் சிக்கலில் மாட்டினர் ராவும் சோரனும்.
இந் நிலையில் கடந்த தேர்தலில் 5 எம்பிக்களுடன் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று மத்திய அமைச்சருமானார் சோரன். ஆனால், கொலை வழக்கில் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் பதவி போனது.
பின்னர் அந்த சிக்கலில் இருந்து வெளியே வந்து மீண்டும் நிலக்கரித்துறை அமைச்சரானார்.
இந் நிலையில் 2005ம் ஆண்டில் ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இல்லாத நிலையிலேயே இவரது கட்சியும் காங்கிரசும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன.
இதற்காக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வரானார். ஆனால், மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் 9 நாளில் முதல்வர் பதவியை இழந்தார் சோரன். பின்னர் மீண்டும் மத்திய அமைச்சராக்கப்பட்டார்.
ஆனால், இவரது உதவியாளர் கொலை வழக்கில் இவரை டெல்லி நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது. இதனால் மீண்டும் பதவியிழந்தார். இருப்பினும் இந்த வழக்கிலும் அப்பீல் செய்து விடுதலையானார்.
அதிலிருந்து மீண்டும் தனக்கு அமைச்சர் பதவி கேட்டு வந்தார். ஆனால், காங்கிரஸ் தரவில்லை. இந் நிலையில் தான் தனக்கு அமைச்சர் பதவி தந்தால் தான் ஆதரவு என நிபந்தனை போட்டு காங்கிரஸை மிரள வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications