For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புலிகளுடன் போர்-எதிர்க்கும் சிங்களர்கள்!

By Staff
Google Oneindia Tamil News

Lanka map
கொழும்பு: இலங்கையில் சிங்கள இன மக்களில் 70 சதவிகிதம் பேர் புலிகளுடன் ராணுவம் போரிட்டுக் கொண்டிருப்பதை விரும்பவில்லை என சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து நிறுவனம் ஒன்று இலங்கையில் ராணுவம் நடத்திவரும் தாக்குதல் தேவையா என்று சிங்களர்களின் கருத்துக்களை அறியும் ஆய்வில் இறங்கியது.

இதில் 30 சதவிகித சிங்கள மக்கள், புலிகளை போரிட்டுத்தான் அடக்க வேண்டும். சமாதானப் பேச்சு வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால் 70 சதவிகிதம் மக்கள் இந்தப் போரே வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

புலிகளுடன் போரிட்டுக் கொண்டிருப்பதைவிட, அவர்களுடன் சமாதானமாகப் பேசி அமைதி காண்பதே நல்லது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்குவது கூடவே கூடாது என 84 சதவிகித சிங்கள மக்கள் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X