For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், எஸ்.பிக்கள் மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகர காவல்துறை இணை ஆணையர்கள் ரவி, துரைராஜ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகரில் வட சென்னை இணை ஆணையராக இருந்தவர் ரவி. இவரது நியமனத்திற்குப் பின்னர் வட சென்னையில் ரவுடிகளின் கொட்டம் வெகுவாக அடக்கப்பட்டது. சமீபத்தில் கூட ரவியின் நேரடி மேற்பார்வையில், ரவுடி பாபாசுரேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் திடீரென ரவுடி மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜியாக ரவி நியமிக்கப்பட்டுள்ளார். ரவி இருந்த பொறுப்புக்கு லஞ்ச ஒழிப்பு துணை இயக்குநர் அபய் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல தென் சென்னை இணை ஆணையர் துரைராஜ், காஞ்சிபுரம் சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். துரைராஜுக்குப் பதில், ஏ.எம்.எஸ்.குணசீலன், புதிய இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் சரக டிஐஜி மாசானமுத்து, விழுப்புரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

நெல்லை நகர குற்றப் பிரிவு போக்குவரத்து துணை ஆணையராக கல்பனா நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆவடி ரெஜிமன்ட் கமாண்டன்ட் மகேந்திர குமார் ரத்தோட், மணிமுத்தாறு விசேஷ போலீஸ் படை கமாண்டன்ட் ஆக மாற்றப்பட்டுள்ளார்.

இதுவரை மணிமுத்தாறு விசேஷ போலீஸ் படை கமாண்டன்ட் தமிழ்ச்சந்திரன் மதுரை அமலாக்கப் பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை நகர குற்றப் பிரிவு துணை ஆணையர் கபில்குமார் சரத்கார் கன்னியாகுமரி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி எஸ்.பி. சந்தோஷ்குமார் சென்னை (வடக்கு) போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக இருந்து வரும் லலிதாலட்சுமி கோவை மேற்கு மண்டல லஞ்சஒழிப்பு எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை லஞ்ச ஒழிப்பு எஸ்.பியாக உள்ள சமுத்திரப்பாண்டி, சிவில் சப்ளை சிஐடி பிரிவு கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X