பி.இ- சென்னை கல்லூரிகளுக்கு கடும் கிராக்கி
சென்னை: சென்னை சுற்றுப் பகுதிகளில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவியரிடையே கடும் கிராக்கி நிலவுகிறது. வேலைவாய்ப்பு, ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இங்கு அதிக அளவில் இருப்பதே இதற்குக் காரணம்
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர் முதலில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள நான்கு கல்லூரிகளைத்தான் முதல் சாய்ஸ் ஆக வைத்துள்ளனர்.
பிறகுதான் பிற கல்லூரிகளுக்கு விருப்பம் தெரிவிக்கின்றனர். பிற கல்லூரிகளிலும், சென்னையைச் சுற்றிஉள்ள பொறியியல் கல்லூரிகளுக்குத்தான் பெரும் டிமாண்ட் உள்ளது.
வெளி மாவட்ட மாணவ, மாணவியரும் கூட சென்னை அருகே உள்ள கல்லூரிகளைத்தான் அதிகம் நாடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், தரமான கல்வி கிடைப்பது, வேலைவாய்ப்புக்கு பிரகாசமான வாய்ப்புகள், ஆங்கில பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள ஏதுவாக இருப்பது உள்ளிட்டவைதான்.
இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் புதிதாக 61 பொறியியல் கல்லூரிகள் சேர்க்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications