அறுந்த மின்கம்பி: ரயில்கள் தாமதம்-மக்கள் அவதி
விழுப்புரம்: விழுப்புரம் அருகே உயர் அழுத்த மின்சார கம்பிகள் அறுந்து சரக்கு ரயில் மீது விழுந்தது. இதனால் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து விருத்தாசலம் அருகே உள்ள ஈச்சங்காட்டிற்கு நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயில் நேற்று சென்றது. ஜானகிபுரம் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது, தொங்கிய நிலையில் இருந்த உயர் மின் அழுத்த கம்பியை தொட்டது. இதனால் தீப்பொறிகளுடன் அறுந்த மின்கம்பி, சரக்கு ரயில் மீது விழுந்தது.
இதை பார்த்த ரயில் டிரைவர் திருமுருகன், உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு தப்பினார். உயர் அதிகாரிகளுக்கும் அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து விழுப்புரம் ரயில் நிலைய மேலாளர், ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. சேது எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டது.
அனந்தபுரி எக்ஸ்பிரஸில் பயணம் செய்த பாஜக தலைவர் இல.கணேசன் உள்பட பயணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியினர். சரக்கு ரயில் வருவதன் காரணமாக ஜானகிபுரம் ரயில்வே கேட் ஏற்கனவே மூடப்பட்டது. சம்பவத்தை தொடர்ந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
உடனடியாக அங்கு விரைந்த விழுப்புரம் மாவட்ட எஸ்பி அமல்ராஜ், டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர்.
அறுந்த விழுந்த கம்பியை அகற்ற சுமார் 3 மணி நேரமானது. அதன் பின்னர் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டன. ஜானகிபுரம் கேட்டும் திறக்கப்பட்டு சாலை போக்குவரத்து தொடங்கியது.
சென்னையில் நடைபெறும் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி, நெல்லை, மதுரை பகுதிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ரயில்களில் வந்தனர். இந்த சம்பவத்தால் குறித்த நேரத்தில் கவுன்சிலிங்கிற்கு செல்ல முடியாமல் மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications