அறுந்த மின்கம்பி: ரயில்கள் தாமதம்-மக்கள் அவதி
விழுப்புரம்: விழுப்புரம் அருகே உயர் அழுத்த மின்சார கம்பிகள் அறுந்து சரக்கு ரயில் மீது விழுந்தது. இதனால் ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து விருத்தாசலம் அருகே உள்ள ஈச்சங்காட்டிற்கு நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயில் நேற்று சென்றது. ஜானகிபுரம் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது, தொங்கிய நிலையில் இருந்த உயர் மின் அழுத்த கம்பியை தொட்டது. இதனால் தீப்பொறிகளுடன் அறுந்த மின்கம்பி, சரக்கு ரயில் மீது விழுந்தது.
இதை பார்த்த ரயில் டிரைவர் திருமுருகன், உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு தப்பினார். உயர் அதிகாரிகளுக்கும் அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து விழுப்புரம் ரயில் நிலைய மேலாளர், ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த பாதையில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. சேது எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டது.
அனந்தபுரி எக்ஸ்பிரஸில் பயணம் செய்த பாஜக தலைவர் இல.கணேசன் உள்பட பயணிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியினர். சரக்கு ரயில் வருவதன் காரணமாக ஜானகிபுரம் ரயில்வே கேட் ஏற்கனவே மூடப்பட்டது. சம்பவத்தை தொடர்ந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
உடனடியாக அங்கு விரைந்த விழுப்புரம் மாவட்ட எஸ்பி அமல்ராஜ், டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர்.
அறுந்த விழுந்த கம்பியை அகற்ற சுமார் 3 மணி நேரமானது. அதன் பின்னர் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டன. ஜானகிபுரம் கேட்டும் திறக்கப்பட்டு சாலை போக்குவரத்து தொடங்கியது.
சென்னையில் நடைபெறும் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்காக கன்னியாகுமரி, நெல்லை, மதுரை பகுதிகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ரயில்களில் வந்தனர். இந்த சம்பவத்தால் குறித்த நேரத்தில் கவுன்சிலிங்கிற்கு செல்ல முடியாமல் மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications