இலங்கை தாக்குதல்-நாகை மீனவர்கள் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்: இலங்கை கடற்படையின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி இன்று முதல் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் நாகை மாவட்ட மீனவர்களும், காரைக்கால் பகுதி மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்புநாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த இரு மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொன்றனர்.இதையடுத்து நாகை மாவட்ட மீனவர்கள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் நாகை மாவட்டம் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 64 கிராம மீனவர்கள் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications