கொறடா உத்தரவு பட்டியலில் சோம்நாத் பெயரை நீக்கியது சிபிஎம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று பிறப்பித்த கொறடா உத்தரவில் லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயர் இடம் பெறவில்லை. இதன் மூலம் சுதந்திரமாக அவர் வாக்களிக்க வழி
ஏற்பட்டுள்ளது.

22ம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளது. கட்சியின் 41 எம்.பிக்களும், 20ம் தேதி டெல்லியில் இருக்க வேண்டும். அடுத்த 2 நாளில் நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவறாமல்கலந்து கொண்டு அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டளைப் பட்டியலில் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் பெயர் இடம் பெறவில்லை. சபாநாயகர் பதவியில் இருப்பதால்தான் சோம்நாத்தின் பெயரை பட்டியலில் சேர்க்கவில்லை என்று தெரிகிறது. எனவே அவர் தனது விருப்பப்படி வாக்களிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+