நேபாள அதிபர் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை இல்லை!

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நேபாள அதிபர் தேர்தலில் போட்டியிட்ட எந்த கட்சி வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் துணை அதிபராக பரமானந்த் ஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நேபாள நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 594. இதில் பிரசந்தா தலைமையிலான மாவோயிஸ்ட் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.

அடுத்த இடத்தில் நேபாள காங்கிரஸ் 110 இடங்களையும், யூஎம்எல் கட்சி 103 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

இந்நிலையில் நேபாளத்தின் முதல் அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. மாவோயிஸ்ட் சார்பில் ராம்ராஜ் ராஜா பிரசாத் சிங்கும், நேபாள காங்கிரஸ் சார்பில் ராம் பரண் யாதவும் போட்டியிட்டனர். இதில் பெரும்பான்மை பெற 298 வாக்குகள் தேவை என்ற நிலை இருந்தது.

ஆனால் ராம் பரண் யாதவுக்கு 4 வாக்குகள் குறைவாக 294 வாக்குகளே கிடைத்தன. ராம்ராஜ் 284 வாக்குகள் பெற்றார். இதனால் யாருக்கும் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.

முன்னதாக மாவோயிஸ்ட் வேட்பாளரை ஆதிரிப்பதாக 86 உறுப்பினர்களை கொண்ட மாதேஸி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சி மாற்றி ஓட்டுப் போட்டு விட்டது. இதனால் மாவோயிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெறமுடியாமல் போய் விட்டது. மேலும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இருப்பினும் பின்னர் நடைபெற்ற துணை அதிபர் தேர்தலில் மாதேஸி கட்சியைச் சேர்ந்த பரமானந்த ஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். நேபாள காங்கிரசும், யுஎம்எல் கட்சியும் ஆதரித்ததால் மாதேஸியின் வேட்பாளர் 312 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

நேபாள அரசியலில் அதிக இடங்களை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள மாவோயிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனதும், துணை ஜனாதிபதி தேர்தலில்தோல்வி கிடைத்துள்ளதும் நேபாள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+