பெங்களூரில் ஷீரடி சாய்பாபா சிலை கண் திறந்ததாக பரபரப்பு
பெங்களூரு: பெங்களூரில் உள்ள தொழிலதிபரின் வீட்டில் உள்ள ஷீரடி சாய்பாபாவின் சிலை கண் திறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கெம்பேகவுடா நகர் கவிபுரம் குட்டஹள்ளியில் கவிகங்காதேஸ்வரர் கோயில் உள்ளது. அதன் பின் புறம் உள்ள வீட்டில் வசிக்கும் தொழிலதிபர் பாபு. சாய்பாபாவின் பக்தரான பாபு, தனது வீட்டில் பாபாவின் மார்பிளால் செய்யப்பட்ட சிலையை வைத்து பூஜை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை பூஜை செய்வதற்காக சிலையை துடைத்தார் பாபு. அப்போது சாய்பாபாவின் இடது கண் திறந்து காட்சி அளித்தார். இதைப் பார்த்த பாபு பரவசமடைந்தார். இந்த தகவல் காட்டுத்தீப்போல அப்பகுதியில் பரவியது. அதை அடுத்து அப்பகுதியில் மக்கள் அதிகளவில் கூடினர். அனைவரும் பாபாவை தரிசித்து மெய்சிலிர்த்தனர்.
இதுகுறித்து பாபு கூறுகையில், நான் பாபாவின் தீவிர பக்தன். 8 மாதங்களுக்கு முன்பு ஷீரடி சென்றேன். அங்குதான் அவரது சிலையை வாங்கினேன். வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்து வந்தேன். பாபா கண் திறந்து அற்புதமும், அதிசயமும் நிகழ்த்தியுள்ளார் என்றார் பரவசமாக.












Click it and Unblock the Notifications