பெரம்பலூர் அருகே மர்ம கும்பல் சுட்டு டிரைவர் பலி
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே மர்ம கும்பல் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் கொலக்கானத்தம் கிராமத்துக்கு நேற்றிரவு மர்ம கும்பல் காரில் வந்தது. அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரன் என்பவரை அந்த கும்பல் சுட்டுக் கொன்றது. அதற்கு முன்பாக அருகில் இருந்த ஜக்காரியா என்பவரின் வீட்டையும் அக்கும்பல் தீ வைத்துக் கொளுத்தியது.
பின்னர் அக்கும்பல் தப்பி ஓடி விட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விசாரணையில் சந்திரன் சேலம் மாவட்டம் ஈஸ்வரம்பாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் டிரைவராக பணியாற்றினார் என்பதும் தெரிய வந்துள்ளது.
கொலைக்கும்பல் யார், எதற்காக சந்திரனை சுட்டுக் கொன்றனர் என்று தெரியவில்லை. இதனால் அக்கிராமத்தில் பரபரப்பு நிலவுகிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications