எம்பிக்களிடம் ஓட்டுக்கு ரூ. 100 கோடி பேரம்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாளை மத்திய அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் ஒரு எம்பிக்கு ரூ. 100 கோடி வரை பேரம் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்து.
காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேசி வரும் கட்சியின் அதிருப்தி எம்பியான பிஷ்னாய், பாஜக விருந்தில் பங்கேற்று நிருபர்களிடம் பேசுகையில்,
என்னை காங்கிரஸ் கட்சியைச் சேசர்ந்த சிலர் சந்தித்து ரூ. 100 கோடி தருவதாகவும், அமைச்சர் பதவி பெற்றுத் தருவதாகவும், அரசுக்கு ஆதரவாக ஓட்டுப் போடுமாறும் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் நான் அதை நிராகரித்து விட்டேன். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக நான் வாக்களிப்பேன். விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவது குறித்து முடிவெடுக்கவுள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications