சமாஜ்வாடி-பகுஜன் எம்பிக்கள் மோதல்-அவை ஒத்திவைப்பு

இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் இறங்கியதோடு ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ள பாய்ந்தனர்.
இதையடுத்து அவர்களை பிற எம்பிக்கள் தலையிட்டு தடுத்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பு எம்பி்க்களும் சபாநாயகரின் இருக்கை முன் நின்று ஒருவர் மீது ஒருவர் நடவடிக்கை கோரி கோஷமிட்டனர்.
அவர்களை இருக்கைக்கு போகுமாறு சபாநாயகர் கூறியதை ஏற்கவில்லை. இதையடுத்து அவையை 3.45 மணி வரை அவர் ஒத்தி வைத்தார்.
பின்னர் மீண்டும் அவை கூடியதும், ராஷ்ட்ரீய ஜனதா தள எம்பி பேசினார். அவருக்கு எதிராக பாஜக கூட்டணி எம்பிக்கள் கடும் கூச்சலிட்டனர்.
அப்போது எழுந்த ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவரும் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் எழுந்து பாஜகவினரை நோக்கி சத்தம் போட்டார். இதையடுத்து மீண்டும் இரு தரப்பும் கடும் வாக்குவாதத்தில் இறங்கினர்.
பின்னர் அமைதி திரும்பியதும் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த பிரிஜேஷ் பாதக் பேசினார். அவர் ரொம்ப ஓவராக சவுண்டு விட்டு கத்தவே, கொஞ்சம் மெதுவா பேசுங்க.. ஏன் இப்படி கத்துகிறீர்கள் என அவரை அறிவுறுத்தினார் சபாநாயகர். இதையடுத்து சிறிது நேரம் அமைதியாக பேசியவர் மீண்டும் கத்தினார்.












Click it and Unblock the Notifications