For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தண்டவாளத்தில் விரிசல்-தப்பிய ரயில்கள்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

திருச்சி ஜங்ஷனுக்கும் பொன்மலை ரயில் நிலையத்துக்கும் இடையிலான தண்டவாளத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதை நேற்று நள்ளிரவு கேங்மேன்கள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து உடனே அதிகாரிகளுக்கு அவர்கள் தெரிவித்தனர். இதனால் திருச்சி ஜங்ஷனுக்கும் திருச்சி டவுன் ஸ்டேஷனுக்கும் இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அந்த மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் பல்வேறு ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டன. சென்னை-செங்கோட்டை இடையிலான பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை-திருநெல்வேலி இடையிலான நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகியவை திருச்சி டவுன் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டன.

சென்னை-மதுரை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் பொன்மலை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ராமேஸ்வரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷனில் நிறுத்தப்பட்டது.

இன்று அதிகாலை 4 மணிக்கு தண்டவாளம் ச ரிசெய்யப்பட்டு போக்குவரத்துத் தொடங்கியது.

English summary
Crack on track: Train services disrupted in Trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X