அரசு டாக்டர்களை தாக்கினால் 10 வருடம் சிறை!
சென்னை: பணியில் இருக்கும் அரசு டாக்டர்களைத் தாக்கினால் அவர்களுக்கு 10 வருடம் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்தை அரசு பிறப்பித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரியாக தராத, சரிவர கவனிக்காமல் அலட்சியமாக நடந்து கொள்ளும் டாக்டர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோல முறையான மருந்துகள் தராமலும், தவறான ஊசி போடுவதாலும் உயிரிழப்புகள் ஏற்படும்போதும் டாக்டர்கள் தாக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. மருத்துவமனைகளும் சூறையாடப்படுகின்றன.
இதிலிருந்து தங்களைக் காக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து அரசு டாக்டர்கள் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். தொடர்ந்து கோரியும் வருகின்றனர்.
இந்த நிலையில் அரசு டாக்டர்களுக்கும், அரசுமருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பு தரும் வகையில் அதிரடியான உத்தரவு ஒன்றினை அரசு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், அரசு டாக்டர்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், நர்சுகள், மருத்துவ, நர்சிங் மற்றும் துணைமருத்துவ மாணவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அவசரச் சட்டம் ஒன்றை அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு ஆளுநர் பர்னாலா ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, மேற்குறிப்பிட்டவர்கள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கான இழப்பீட்டை சம்பந்தப்பட்டவர்கள் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசரச் சட்டத்திற்கு இந்திய மருத்துவ கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications