டெல்லியில் கருணாநிதி

நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்ற செய்தியை அடுத்து முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்புதிரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், நான்கு ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்ளுக்குக் கிடைத்த வெற்றி இது.
இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.
விவாதத்தின்போது அத்வானி பேசுகையில், இந்த அணு சக்தி ஒப்பந்தத்தை பாஜக ஆட்சியும் ஏற்றுக் கொள்ளும், ஆனால் மாற்றி அமல்படுத்துவோம் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறவில்லை.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள இந்த அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாளை (இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் வாழ்த்து சொல்லி விட்டேன்.
டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.
கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது.
பல கோடி ரூபாய்களை எம்.பிக்களுக்கு யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுப் போய் விட்டார்கள். சபாநாயகரே விசாரிப்பதாக சொல்லியுள்ளார். பணம் வாங்கப்ட்டிருந்தால், அது ஜனநாயக கொலை என்றார் கருணாநிதி.
டெல்லி பயணம்:
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து கூறுவதற்காக முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி சென்றார்.
காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, ஏ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றனர்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications