தமிழக இளைஞர் துபாய் மருத்துவமனையில் அனுமதி
துபாய்: உடல் நலக் குறைவு மற்றும் மனநிலை சரியில்லாத நிலையில் தமிழக வாலிபர் துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் துபாயில் உள்ள ராஷித் மருத்துவமனையில் இந்திய துணைத் தூதரக அலுவலர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோர்வாகக் காணப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் குணசேகர் என்றும் அவரது பெற்றோர் பெரிய கருப்பன்-விஜயலட்சுமி என்று தெரிவித்தார். அவரது விபரம் வருமாறு:
குணசேகர் (30)
த/பெ. பெரிய கருப்பன்
கிழக்குத் தெரு
எஸ். பி. மங்கலம் ( சர்வோதய மங்கலம் )
கொட்டாம்பட்டி அருகில்
சிங்கம்புணரி ( வழி )
சிவகங்கை மாவட்டம்
அவரைப் பற்றிய முழுவிபரங்கள் தெரிந்தால் துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் தெரிவிக்கவும். மேற்கண்ட தகவல் அவர் தெரிவித்ததன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுதான் அவரது முழு முகவரியா என்பது உறுதியாகத் தெரியாத நிலை உள்ளது.












Click it and Unblock the Notifications