பஸ் மீது தாக்குதல்- 4 சட்டக் கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட்
நெல்லை: பஸ் மீது கல் வீசித் தாக்கிய 4 நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள் பேச்சிமுத்து, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கடந்த 21ம் தேதி இரவு கல்லூரி முன்புள்ள இந்திய மாணவர் சங்க கொடி கம்பத்திற்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த பாளையை சேர்ந்த சந்தனகுமார், ரவி, முருகபாண்டியன் ஆகியோர் மாணவர்களிடம் தகராறு செய்து தாக்கினர்.
பேச்சிமுத்து, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி 22ம் தேதி கல்லூரி முன் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் கல் வீசி தாக்கப்பட்டது. இதில் பஸ் கண்ணாடி உடைந்தது.
இதையடுத்து சட்டக் கல்லூரி 5ம் ஆண்டு மாணவர்கள் உச்சிமாகாளி, 4ம் ஆண்டு மாணவர்கள் அருண் பிரவின், ரமேஷ் ஆகியோரை கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications