For Daily Alerts
Just In
பெங்களூர் குண்டு-இஸ்ரோ தலைவர் கண்டனம்
பெங்களூர்: பெங்களூர் குண்டுவெடிப்புச் சம்பவம் ஏற்புக்குரியதல்ல. கண்டனத்துக்குரியது என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. இதை ஏற்க முடியாது.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த சுஹஸ்ரீ ரவியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
இதுபோன்ற சம்பவங்களை கண்டு நாம் பயந்து விடாமல் முன்னை விட உறுதியாகவும், ஒற்றுமையாகவும் இருந்தால் தானாகவே இவை ஒழிந்து விடும் என்றார் நாயர்.
Story first published: Saturday, July 26, 2008, 11:52 [IST]