ஜெனரேட்டரில் தலை முடி சிக்கி பெண் சாவு
சென்னை: ஜெனரேட்டரில் தலை சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பம்மல் அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஜாவேத். இவரது மனைவி பரானா. 38 வயதாகும் பரானாவுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
பி.காம் படித்துள்ள பரானா, பெரியமேட்டில் உள்ள பிரேமா பேலஸ் என்கிற லாட்ஜில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.
தற்போது சென்னை மாநகரில் ஒரு மணி நேர மின்தடை அமல் செய்யப்பட்டுள்ளது. பெரியமேடு பகுதியில் பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரை மின்சாரம் தடைபட்டு வருகிறது. இதனால் அந்த சமயத்தில் ஜெனரேட்டர் மூலமாக லாட்ஜில் மின்சாரம் கொடுக்கப்பட்டு வந்தது.
நேற்றும் அதுபோல கரன்ட் போனது. பின்னர் ஒரு மணியளவில் கரன்ட் திரும்ப வந்தது. இதையடுத்து ஜெனரேட்டரை ஆஃப் செய்வதற்காக பரானாரா சென்றார்.
ஜெனரேட்டர் இருந்த அறை மிகவும் குறுகியது. அதில் உள்ளே சென்று பரானா சுவிட்ச்சை ஆஃப் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பரானாவின் சேலைத் தலைப்பு ஜெனரேட்டரில் சிக்கிக் கொண்டது.
படு வேகமாக ஜெனரேட்டருக்குள் இழுக்கப்பட்டார் பரானா. அதில் சேலை பரானாவின் கழுத்தை இறுக்கியது. அவரது தலைமுடியும் ஜெனரேட்டருக்குள் சிக்கிக் கொண்டது.
அந்த சமயத்தில் லாட்ஜ் ஊழியர்கள் யாரும் அருகில் இல்லாததால் பரானாவைக் காப்பாற்ற முடியவில்லை. இதனால் பரானா பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டு விட்டது.












Click it and Unblock the Notifications