ஐ.நா. மனித உரிமை ஆணைய தலைவராக தெ. ஆப்பிரிக்க தமிழ்ப் பெண்

67 வயதாகும் நவநீதம் பிள்ளை ஏழை தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்தவர். இவரது தந்தை பஸ் டிரைவராக இருந்தார். நிறவெறி தலைவிரித்தாடியபோது அதற்கு இலக்காகி பல்வேறு இன்னல்களை சந்தித்தவர் பிள்ளை.
மிகுந்த வறுமை, நிறவெறிக் கொடுமைக்கு மத்தியிலும் சிறப்பாக படித்து சட்டப் படிப்பை முடித்தார் பிள்ளை. தென் ஆப்பிரிக்காவின் நேடால் மாகாணத்திலேயே முதல் முறையாக வழக்கறிஞரான பெண் என்ற பெருமையும் பிள்ளைக்கு உள்ளது. 1968ம் ஆண்டு வக்கீலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர் இனவெறி கொடுமைகளுக்கு எதிராக போராடினார். அதுதொடர்பான வழக்குகளில் ஆஜரானவர். முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆதரவாகவும் அரசியல் வழக்குகளில் ஆஜராகிய பெருமைக்குரியவர் பிள்ளை.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த பெருமைக்குரிய பிள்ளை, 2003ம் ஆண்டு ஹேக் நகரில் உள்ள சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அங்குதான் நீதிபதியாக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
அதற்கு முன்பு 1995ம் ஆண்டு ருவாண்டாவுக்கான சர்வதேச கிரிமினல் டிரிப்யூனலிலும் நீதிபதியாக பணியாற்றியுள்ளாளார் பிள்ளை.
தற்போது ஐ.நா மனித உரிமை ஆணைய தலைவராக இருக்கும் கனடாவின் லூயிஸ் ஆர்பரின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் பிள்ளை அப்பொறுப்பை ஏற்பார்.
பிள்ளையின் நியமனத்திற்கு ஆரம்பத்தில் அமெரிக்கா கடும் ஆட்சேபனை தெரிவித்தது. அவரது நியமனத்தை கடுமையாகவும் எதிர்த்தது. ஜிம்பாப்வேக்கு ஆதரவான பிள்ளையின் கருத்துக்கு ஆட்சேபனை தெரிவித்து இந்த எதிர்ப்பை தெரிவித்தது அமெரிக்கா. இருப்பினும் அதை நிராகரித்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், பிள்ளையை இந்த உயர் பதவிக்கு நியமனம் செய்து நேற்று உத்தரவிட்டார்.
192 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில் பிள்ளையின் நியமனத்திற்கு ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன் பின்னர் நான்கு ஆண்டு காலத்திற்கு இப்பதவியை வகிப்பார் பிள்ளை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications