இறந்த பிரமுகர் உடலுடன் தேமுதிக மறியல்
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட தேமுதிக தொண்டரணி செயலாளர் பாலாஜியின் உடலுடன், தேமுதிகவினர் இன்று சாலை மறியல் செய்ததால், ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊரப்பாக்கம் ஐயஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (34). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தேமுதிக தொண்டரணி செயலாளராகவும் இருந்து வந்தார்.
நேற்று மாலை நான்கு மணியளவில் பாலாஜி வீட்டிலிருந்து பைக்கில் ரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது வழியில் இருந்த டாஸ்மாக் கடை அருகே ஒரு கும்பல் பாலாஜியை மடக்கி சரமாரியாக தாக்கினர்.
கத்தி, அரிவாள்களால் தாக்கப்பட்ட பாலாஜி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பிணமானார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பாலாஜியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனது கணவர் கொலைக்கு திமுக ஊராட்சி மன்றத் தலைவர் குமார்தான் காரணம் என உயிரிழந்த பாலாஜியின் மனைவி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து குமார் தலைமறைவாகி விட்டார்.
இன்று காலை ஊரப்பாக்கத்தில் தேமுதிகவினர் பெருமளவில் திரண்டனர். . பிரேத பரிசோதனை முடிந்த மருத்துவமனையிலிருந்து பாலாஜியின் உடலுடன் வந்த ஆம்புலன்ஸை மறித்து ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட மாட்டாது என்றும், ஊராட்சி மன்ற தலைவர் குமாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரினர்.
தகவல் அறிந்தது கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் மாணிக்கம் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். கூடியிருந்த தேமுதிகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து அதிரடியாக இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆம்புலன்ஸில் ஏறி அதை ஓட்ட முயன்றார்.
இதைப் பார்த்த தேமுதிகவினர் ஆம்புலன்ஸ் முன்பு படுத்துக் கொண்டனர். இதனால் மாணிக்கத்தால் ஆம்புலன்ஸை ஓட்ட முடியவில்லை.
பாலாஜியின் உறவினர்களிடமும், தேமுதிக பிரமுகர்களிடமும், ஊர் பொதுமக்களிடம் அவர் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது.
தேமுதிகவினரின் இந்தப் போராட்டத்தால் ஜி.எஸ்.டி. சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
-
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications