அரசு அலுவலகங்களில் மின் சிக்கனம்-உத்தரவு!
சென்னை: அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சர் அலுவலகங்களிலும் மின் சிக்கனத்தை கடைபிடிக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள் கட்டாய விடுமுறை, சென்னையில் தினமும் ஒரு மணி நேரமும், மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு 2 மணி நேரமும், கிராமங்களில் 4 மணி நேரமும் மின்வெட்டு போன்ற கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
அடுத்ததாக அரசு அலுவலகங்களிலும் அமைச்சர் அலுவலகங்களிலும் மின் சிக்கனம் கடைபிடிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான வழிமுறைகள் குறித்த சுற்றறிக்கை எரிசக்தி துறை மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தேவையற்ற நேரங்களில் லைட், பேன், ஏசி ஆகியவற்றை நிறுத்திவிட வேண்டும். அலுவலர்கள் மேஜைக்கு ஒளி தரும் லைட், பேன் மட்டும் உபயோகிக்க வேண்டும். பகலில் அலுவலக அறைக்கு போதுமான வெளிச்சம் இருந்தால் தாழ்வாரம் மற்றும் நடைபாதைகளில் எரியும் விளக்குகளை நிறுத்தி விட வேண்டும்.
அலுவலகத்தில் 2 ஏசிக்கள் இருந்தால் ஒன்றை மட்டும் பயன்படுத்தலாம். அறையில் யாரும் இல்லாத நேரங்களில் ஏசி இயக்கத்தை தவிர்க்கலாம். கம்ப்யூட்டர் போன்ற அலுவலக பயன்பாட்டுக் கருவிகளை உபயோகிக்காதபோது நிறுத்தி வைக்கலாம். கம்ப்யூட்டர், மானிட்டர், ஜெராக்ஸ் போன்ற மெஷின்களை பயன்படுத்தாதபோது ஸ்லீப் மோடில் வைத்தால் 40 சதவீத மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்.
ஜெராக்ஸ் மிஷினை அடிக்கடி பயன்படுத்தாமல், நகலெக்கும் பணிகளை ஒருங்கிணைத்து பயன்படுத்தவும். லேப்-டாப், மொபைல் ஆகியவற்றை சார்ஜ் செய்தவுடன் இணைப்பை துண்டித்து விட்டால் மின்சாரம் வீணாவதை தவிர்க்கலாம்.
இந்த அறிவுரைகளை சரியாக கடைபிடிப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications