அலகாபாத்- வங்கதேச நபரிடம் விசாரணை
அலகாபாத்: அலகாபாத் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும் வகையில் இருந்து வங்கதேசத்தைச் சேர்ந்தவரை போலீசார் பிடித்தனர்.
அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் ரயில் நிலையத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் சுற்றி கொண்டிருந்தார். தீவிரவாதியாக இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார் அவரை பிடித்து ஷாகன்ஜ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். எஸ்பி ஏ.கே.விஜேடா அந்த நபரிடம் விசாரித்தார்.
விசாரணையில், அவர் பெயர் நசீம் என்றும் வங்கதேசத்தின் டாகாவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் விசா உள்பட முக்கிய ஆவணங்கள் இல்லாமல் சில வாரங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்ததாக நசீம் கூறினார். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சந்தேப்படும் வகையி்ல யாராவது இருந்தால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கும்படி பொதுமக்களிடம் போலீசார் கூறியுள்ளனர். அலகாபாத்தில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் உள்ள போன் பூத்களில் செய்யப்பட்ட போன் அழைப்பு விவரங்களை போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications