சென்னையில் 3 பேர் கைது-தீவிரவாதிகளி்ன் கூட்டாளிகள்?
பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து நாடு முழுவதும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். முக்கிய பகுதிகள், வழிபாட்டு தலங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நெல்லையில் ஷேக் அப்துல் கபூர், முகமது அன்வர் பாதுஷா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சுதந்திர தினத்தன்று நெல்லையிலும் சென்னையிலும் குண்டு வைக்க திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் சென்னையில் மண்ணடி பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி ஹீரா, முகமது காசிம் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் அப்துல் கபூரின் கூட்டாளிகள் எனத் தெரியவந்துள்ளது.
அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் எஸ்எம்எஸ் மூலம் வெடிகுண்டு புரளி பரப்புவோர் மீது 3 ஆண்டுகள் ஜாமீனில் வெளிவர முடியாத சிறை தண்டனை அளிக்கப்படும் என்று சென்னை காவல் துறை ஆணையர் சேகர் எச்சரித்துள்ளார்.













Click it and Unblock the Notifications