உறுப்பினர்களை சேர்க்க அவகாசம் நீடிப்பு-ஜெ.
சென்னை: அதிமுகவில் உள்ள உறுப்பினர்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் கால அவகாசம் அடுத்த மாதம் 16ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக உறுப்பினர்கள், தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான காலக் கெடு 16.8.2008 வரை நீட்டிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, கழக அமைப்புத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்களை உடனடியாக தலைமைக் கழகத்தில் இருந்து பெற்றுச் சென்று பூர்த்தி செய்து, அவற்றை 16.8.2008-ம் தேதிக்குள் தவறாமல் திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் காலக் கெடு இனி நீட்டிக்கப்படமாட்டாது.
இதுவரையில், உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் ஒப்படைத்திருப்பவர்கள், அதற்கான ரசீதினைக் காண்பித்து உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications