மீண்டும் பொடா-ராம.கோபாலன் கோரிக்கை

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பெங்களூர், அகமதாபாத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் கடும் கண்டனத்துக்குரியவை. இது தீவிரவாதிகள் நம் நாட்டின் மீது தொடுத்துள்ள போர். இதில் அலட்சியம் காட்டக்கூடாது.
தீவிரவாதத்துக்கு எதிராக மக்களை தயார்படுத்த வேண்டும். மக்கள் தங்களைத் தற்காத்து கொள்ளும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
இந்தப் பிரச்சனையை அலட்சியமாக எடுத்துக் கொண்டால் மோசமான பின் விளைவுகள் ஏற்படும். இதில் மத்திய, மாநில அரசுகள் கூட்டாக செயல்பட வேண்டும்.
பாஜக ஆளும் மாநிலங்களில் குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது என்று நினைக்கக் கூடாது. இது நாட்டுக்கு எதிராக தாக்குதல்.
தீவிரவாதிகளை ஒடுக்க மீண்டும் பொடா சட்டம் கொண்டு வரப்படவேண்டும். இவர்களுக்கு துணை போகும் மனித உரிமை கழகத்தினர் முதலில் வாயை மூட வேண்டும் என்றார்.
மீண்டும் பொடா வேண்டும் என பாஜக தலைவர் அத்வானி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரும் கோரியுள்ளது நினைவுகூறத்தக்கத்து.












Click it and Unblock the Notifications