நெல்லை: கல்குவாரி, வெடிமருந்து குடோன்களில் சோதனை
புளியங்குடி: நெல்லை மாவட்ட எல்லை பகுதியில் ள்ள தனியார் கல்குவாரி மற்றும் வெடிமருந்து குடோன்களில் போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் குண்டு வைக்க திட்டமிட்ட தீவிரவாதிகள் நெல்லையிலும் சென்னையிலும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தின் எல்லை பகுதியான சிவகிரி, புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் உள்ள கல்குவாரி, வெடிமருந்து குடோன்களில் போலீசார் நேற்று விடிய விடிய சோதனை மேற்கொண்டனர்.
புளியங்குடி இன்ஸ்பெக்டர் கண்ணன், சிவகிரி இன்ஸ்பெக்டர் பாண்டி, வாசுதேவநல்லூர் எஸ்ஐ செந்தில்குமார் மற்றும் போலீசார் தனியார் வெடிமருந்து குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
சிவகிரி, தேவிபட்டிணம், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், இடைகால் பகுதிகளில் உள்ள தனியார் கல்குவாரிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும் அவ்வழியாக குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களையும் போலீசார் சோதனையிட்டனர்.












Click it and Unblock the Notifications