சென்னை ஏர்போர்ட்டில் பஸ் மோதி ஊழியர் பலி
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாரமவுண்ட் விமான நிறுவனத்தின் பஸ் மோதி கிங்கிஷ்ஷர் விமான நிறுவன ஊழியர் ஒருவர் பலியானார். விமான நிலையத்தில் நடந்த இன்னொரு பஸ் விபத்தில் பயணி காயமடைந்தார்.
விமானங்கள் நிற்கும் டார்மேக் அருகே பயணிகளை அழைத்துச் செல்ல பாரமவுண்ட் விமான நிறுவனத்தின் பேருந்து பயணிகள் காத்திருக்கும் பகுதி அருகே வந்தது.
அப்போது கிங்பிஷ்ஷர் விமான நிறுவனத்தின் லோடரான சிவா (33) என்பவர் மீது பஸ் மோதியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகி்ச்சை பலனின்றி இறந்தார்.
அந்த பஸ்சின் டிரைவர் விமான நிலைய போலீசாரிடம் சரணடைந்தார்.
ஸ்பைஸ்ஜெட் பஸ் மோதி பயணி காயம்:
இந் நிலையில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து டிராலிகள் மீது மோதியதில், அதன் அருகே நின்றிருந்த கொல்கத்தாவைச் சேர்ந்த பயணியான சேகர் என்பவர் காயமடைந்தார்.