மேடை நடனத்திற்குத் தடை: கண்டித்து கலைஞர்கள் உண்ணாவிரதம்
கடலூர்: விழாக்களில் நடைபெறும் மேடை நடனங்களில் ஆபாசம் பெருகிவிட்டதாக கூறி மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு போலீஸார் தடை விதித்ததை எதிர்த்து கடலூரில் எம்.ஜி.ஆர், கமல், ரஜினி, விஜயகாந்த், வடிவேலு, குஷ்பு, சிம்ரன் வேடங்களில் நடனக் கலைஞர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிராமப்புறங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றில் இப்போதெல்லாம் மேடை நடனங்கள் இடம் பெறுவது வழக்கமாகி விட்டது.
பிரபல சினிமா கலைஞர்கள் வேடத்தில் நடனக் கலைஞர்கள் ஆடுவதால் சினிமா கலைஞர்களை நேரில் பார்த்ததைப் போன்ற திருப்தி மக்களுக்குக் கிடைக்கிறது. ஆனால் ஓரிரு இடங்களில் இதில் ஆபாசத்தைப் புகுத்தி விடுகிறார்கள். அரை குறை ஆடைகளுடன் பெண் கலைஞர்கள் நடனமாடுவதால் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என போலீஸாருக்கு கோரிக்கை வந்தது.
இதையடுத்து இதுபோன்ற மேடை நடன நிகழ்ச்சிகளுக்கு தற்போது போலீஸார் தடை விதித்து வருகின்றனர்.
இதை எதிர்த்து கடலூர் மாவட்ட மேடை நடனக் கலைஞர்கள் நலச் சங்கம் சார்பில் நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே நூதன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதத்தில் எம்.ஜி.ஆர், கமல், ரஜினி, விஜயகாந்த், வடிவேலு, பாக்யராஜ், சிம்ரன், குஷ்பு உள்ளிட்ட பிரபலங்களின் வேடங்களுடன் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர். வேடத்தில் இருந்த அன்பு என்ற கலைஞர் கூறுகையில், போலீஸாரின் இந்தத் தடையால் எங்களது ஒட்டு மொத்த குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அனைவரும் பட்டினி கிடக்கும் நிலையில் உள்ளோம்.
எங்களுக்கு தெரிந்தது இது ஒன்றுதான். இது எங்களின் வாழ்க்கை உயிர் நாடி. எங்கோ ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டுமொத்தமாக அனைவரையும் தண்டிக்கக் கூடாது.
தற்போது ஆடி மாதம். கோயில் விழாக்கள் நிறைய நடக்கிறது. எங்களுக்கும் கச்சேரிகள் நிறைய வருகிறது. ஆனால் போலீஸாரின் தடையால் எங்களால் அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார் வருத்தத்துடன்.
புன்னகை சிந்தும் முகத்துடன் மக்களை மகிழ்விக்கும் வகையில் வேடமிட்டு நடனம் ஆடும் இந்தக் கலைஞர்கள், முகம் நிறைய சோகத்துடன், குறிப்பாக கவலை படர்ந்த முகத்துடன் இருந்த 'எம்.ஜி.ஆரைப்' பார்த்தபோது, காண வந்த மக்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது உண்மை.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications