பொறுப்பில்லாத காரத்- சோம்நாத் தாக்கு
டெல்லி: பதவிகாலம் முடியும் வரை சபாநாயராக தொடர்ந்து நீடிப்பேன் என்று கூறி மௌனம் கலைத்துள்ளார் சோம்நாத் சட்டர்ஜி.
அணு ஒப்பந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றன. இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 22ம் தேதி நடந்தது.
இதற்கிடையில் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்யும்படி சோம்நாத் சட்டர்ஜிக்கு மார்க்சிஸ்ட் கட்சி நெருக்கடி கொடுத்தது. ஆனால் வெற்றி கரமாக வாக்கெடுப்பை நடத்தி முடித்தார் சோம்நாத். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி மார்க்சிஸ்ட் கட்சி உத்தரவி்ட்டது.
இதனால் சோம்நாத் வருத்தமடைந்தார். இந்நிலையில் அவர் தொடர்ந்து சபாநாயகராக நீடிப்பாரா என்ற கேள்வியும், சோம்நாத்தின் மௌனம் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன் கொல்கத்தா சென்ற சோம்நாத் அவருடைய நண்பரும் கடந்த 2000ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவருமான சைபுதீன் சௌத்ரியை சந்தித்தார்.
சோம்நாத், கட்சியின் நடவடிக்கையால் அதிருப்தியும், மன உளைச்சலும் அடைந்திருப்பதாகவும் சைபுதீன் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 28ம் தேதி டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்படும் முன் சோம்நாத் கூறுகையில், மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டது குறித்து மக்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். அவர்களே அதை தீர்மானிக்கட்டும். இந்த விவகாரத்தில் எனது கருத்தை சில நாட்கள் கழித்து கூறுகிறேன் என்று கூறினார்.
இந்நிலையில் சோம்நாத் இன்று மௌனம் கலைத்துள்ளார். அவர் கூறுகையில், பதவியில் தொடர்ந்து நீடிப்பேன். மார்க்சிஸ்ட் கட்சி என்னை வழி நடத்த முடியாது. பிரகாஷ் காரத் பொறுப்பில்லாமல் செயல்படுகிறார்.
சபாநாயகர் பதவிக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் கண்டிப்பாக நிறைவேற்றுவேன். பதவிகாலம் முழுவதும் நீடித்து இருந்து பணியாற்றுவேன். நாட்டு நலனுக்கு கட்சிக்கு எதிராக முடிவு எடுத்துள்ளேன்.
என்னை கட்சியை விட்டு நீக்கிய தினம் தான் என் வாழ்க்கையிலேயே மிகவும் வருத்தமான நாள் என்றார்.
தனது சுயநலத்துக்காகவும், சில கட்சிகளுக்காகவும் இந்த பதவியில் அவர் நீடிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் கடுமையாக மறுத்தார்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications