நெல்லை கொண்டு செல்லப்பட்டார் அலி அப்துல்லா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குத் திட்டமிட்ட தீவிரவாத தலைவர் அலி அப்துல்லாவை போலீஸார் விசாரணைக்காக பலத்த பாதுகாப்புடன் நெல்லைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆகஸ்ட் 1 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் நெல்லையில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி பெரும் நாச வேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டினார் அலி அப்துல்லா. புழல் சிறையில் இருந்தபடியே இந்த சதி வேலையை அவர் திட்டமிட்டு வந்தார்.

இந்தத் திட்டத்தின் தளபதியாக நியமிக்கப்பட்ட நெல்லை பேட்டை அப்துல் கபூர் பிடிபட்டதன் மூலம் இந்த சதித்திட்டம் தெரியவந்தது.

இந்த நிலையில் அலி அப்துல்லாவை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை போலீஸார் தீர்மானித்தனர்.

இதையுட்டு நெல்லை நீதிமன்ற உத்தரவைப் பெற்று நேற்று மாலை அலி அப்துல்லாவை நெல்லைக்கு அழைத்துச் செல்ல அங்கிருந்து போலீஸ் படை வந்தது. அவர்கள் நேற்று மாலை பலத்த பாதுகாப்புடன் அலி அப்துல்லாவை புழல்சிறையிலிருந்து அழைத்துச் சென்றனர்.

சென்னை மாநகர எல்லை வரை சென்னை போலீஸார் பாதுகாப்புக்கு வந்தனர். அதேபோல வழியெங்கும் அந்தந்த மாவட்ட போலீஸார் பாதுகாப்புக்கு சென்றனர்.

நெல்லை கொண்டு செல்லப்பட்டுள்ள அலி அப்துல்லாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தவுள்ளனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+