For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலெக்டர் அலுவலக இடிப்பு- வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சேலம்: நீதிமன்ற உத்தரவை மீறி சேலம் கலெக்டர் அலுவலக்தை இடித்த வழக்கில் 12ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், மக்கள் குடியுரிமை சங்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் சங்கத்தின் பொது செயலாளர் மனோகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இடிக்க கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இடிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் இடித்தனர்.

அதே போன்று சேலம், அங்கம்மாள் குடியிருப்பில் இருந்த 31 குடியிருப்புகளை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆட்கள் இடித்து தள்ளினர். இதனால் அங்குள்ள மக்களின் உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை முறையாக செயல்படவில்லை. எனவே டிஜிபி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி மற்றும் இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், டிஜிபி ஆகியோர் வருகிற12ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X