நடிகர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை

பூந்தோட்டக் காவல்காரன் படத்தின் மூலம் நடிகரானவர் ஆனந்த். அதன் பிறகு திருடா திருடா, சொல்லாமலே, நிலாப் பெண்ணே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆனந்தம் உள்ளிட்ட டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இவரது வீடு கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள உத்தண்டியில் இருக்கிறது. கடந்த 23ம் தேதி தனது குடும்பத்துடன் தாய்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் ஆனந்த். நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்பினார்.
வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவு திறந்து கிடந்தது. காவலாளியையும் காணவில்லை. உள்ளே போய்ப் பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டிருந்தது. அதில்இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த 50 பவுன் நகைகளைக் காணவில்ைல என்று தெரிந்தது.
இதையடுத்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஆனந்த் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மாடிக் கதவை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்தது விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications