ஆந்திர ரயிலில் தீ-பலி 32 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

வாராங்கல்: ஆந்திர ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஆந்திர மாநிலம் செகந்திராபாத்-காக்கினாடா இடையிலான கௌதமி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று முன்தினம் புறப்பட்டது. நேற்று அதிகாலை 1.05 மணியளவில் தல்லபுசலப்பள்ளி- மெஹ்பூபாபாத் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்துபோது எஸ்-10 பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்தத் தீ எஸ்9, 11, 12, 13 ஆகிய மேலும் மேலும் 4 பெட்டிகளுக்கும் பரவியது. இதில் 32 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மின் கசிவு காரணம்:

சம்பவ இடத்தில் தடயவியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வில், மின் கசிவு காரணமாகவே தீ ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பார்வை:

தீ விபத்து நடந்த இடத்துக்கு அம்மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். எரிந்துபோன ரயில்களுக்குள் சென்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+