சென்னை விமான நிலையத்தில் பையால் பீதி!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் வெடிகுண்டு பீதி கிளம்பியதால் விமான நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டது.
தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திற்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உஷார்நிலையில்உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் இது புரளி என்று பின்னர் தெரிய வந்தது.
இந்த நிலையில் இன்றும் விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. விமான நிலையத்தின், காமராஜர் உள்நாட்டு முனையப் பகுதியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது.
இதையடுத்து அதில் வெடிகுண்டு இருக்காலமோ என்ற பீதி ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் வெடிகுண்டு நிபுணர்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்து முன்னெச்சரிக்கையுடன் அந்தப் பையை திறந்து பார்த்தனர். அப்போது அதில் ஒரு டிபன் பாக்ஸும், ஒரு ஸ்வீட் பாக்ஸும் இருந்தது.
டிபன் பாக்ஸை திறந்து பார்த்தபோது அதில் எதுவும் இல்லை,காலியாக இருந்தது. இதையடுத்து அங்கு பதட்டம் தணிந்து நிம்மதி பிறந்தது. விசாரணையில் துப்புறவுத் தொழிலாளி ஒருவரின் பை அது என்று தெரியவந்தது.
மதிய உணவை சாப்பிட்ட அவர் பாத்ரூம் போவதற்காக பைக்குள் டிபான் பாக்ஸையும், ஸ்வீட் டப்பாவையும் வைத்து விட்டுப் போயுள்ளார். அவர் வருவதற்குள் இப்படி ஒரு பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
பாத்ரூம் போய் விட்டு வந்த அவரை பாதுகாப்புப் படையினர் கடுமையாக எச்சரித்து பையைக் கொடுத்தனர்.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications