கர்நாடகத்திடம் மன்னிப்பு: ரஜினிக்கு பாமக, ராஜேந்தர் கண்டனம்
சென்னை: கர்நாடகத்திடம் மன்னிப்பு கேட்டதன் மூலம் ஹீரோ என்ற இமேஜிலிருந்து ஜீரோவாக மாறி விட்டார் என இயக்குநர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார். தமிழர்களை கேவலப்படுத்தி விட்டார் என பாமகவும் வர்ணித்துள்ளது.
குசேலன் பட ரிலீஸையொட்டி கன்னட மக்களிடம், தப்பாக பேசி விட்டேன். இனிமேல் இப்படிப் பேச மாட்ேடன் என்று ரஜினிகாந்த வருத்தம் தெரிவித்துள்ளது குறித்து விஜய டி.ராஜேந்தர் கருத்து ெதரிவிக்கையில், இதுவரை ஹீரோவாக இருந்து வந்தார் ரஜினி. ஆனால் எப்போது அவர் மன்னிப்பு கேட்டாரோ அப்போதே அவர் ஜீரோவாகி விட்டார்.
இப்படி மன்னிப்புகேட்டதற்குப் பதிலாக கர்நாடகத்தில் தனது படத்தால் ஏற்படும் நஷ்டத்திற்கு ஈடான தொகையை அவர் தயாரிப்பாளரிடமும், விநியோகஸ்தரிடமும் வழங்கியிருக்கலாம். அது கெளவரமாக இருந்திருக்கும் என்றார் ராஜேந்தர்.
இதேபோல நாகர்கோவில் வந்த பாமக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்னுச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழர்களை கேவலப்படுத்தியுள்ளது ரஜினியின் மன்னிப்பு. கன்னட அமைப்புகளிடம் அவர் சரணாகதி அடைந்துள்ளதன் மூலம் தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ளார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications