24 வார கால சிசு-அபார்ஷன் செய்ய அனுமதி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

Niketha
மும்பை: தங்களது 24 வார கால சிசுவை அபார்ஷன் செய்ய அனுமதிக்கக் கோரி நிகேதா மேத்தா என்கிற பெண்ணும், அவரது கணவர் ஹரேஷும் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. குழந்தை குறையுடன் பிறக்கும் என்பதை நிரூபிக்கும் ஆதாரத்தை நிகேதா தம்பதியினர் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

மும்பையைச் சேர்ந்த நிகேதா மேத்தா மற்றும் ஹரேஷ் தம்பதியினர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், எங்களது குழந்தையின் இதயத்தில் கோளாறு ஏற்பட்டிருப்பது மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே குழந்ைத பிறந்த பின்னர் இதயக் கோளாறுடன் அவதிப்பட நேரிடும்.

எங்களால் எங்களது குழந்தை அவதிப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எங்களது குழந்தையைப் பார்த்து எங்களது குடும்பத்தினர் அவதிப்படுவதை நாங்கள் விரும்பவில்லை.

எங்களது குழந்தை தினசரி அவதிப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாது. எத்தனைதான் அரசும், பிறரும் எங்களது குழந்தைக்கு உதவி செய்தாலும் கூட அது குழந்தைக்கு எந்த வகையிலும் உபயோமாக இருக்காது.

மருத்துவ ரீதியிலான கருத்தடைச் சட்டத்தின் கீழ் 20 வாரங்களுக்குட்பட்ட சிசுவை மட்டுமே கருத்தடை மூலம் அழிக்க முடியும். அதற்கு மேற்பட்ட வாரத்திலான குழந்தை என்றால், தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே கருத்தடை செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே இந்த சட்டத்திலிருந்து எங்களுக்கு விதி விலக்கு அளித்து எங்களது குழந்தையை கருத்தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இதுகுறித்து நிகேதா சிகிச்ைச பெற்று வரும் ஜேஜே மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து ஜேஜே மருத்துவமனை டாக்டர்கள் சார்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், குழந்தை இதயத் கோளாறுடன் பிறக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. அப்படியே பிறந்தாலும் பேஸ்மேக்கர் பொருத்திக் கொண்டால் வழக்கமான வாழ்க்கையை அக்குழந்தையால் வாழ முடியும். பிறரின் உதவி தேவைப்படாமலேயே குழந்தை வாழ முடியும்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பேஸ்மேக்கர் கருவியை மாற்றினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பேஸ்மேக்கர் கருவிக்கு நிறைய செலவிட வேண்டியிருக்கும். அதை எங்களால் தாங்க முடியாது என்று நிகேதா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இன்று நிகேதாவின் கோரிக்கையை நிராகரித்தது. குழந்தை ஊனத்துடன்தான் பிறக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அதற்கான வாய்ப்புகள் குறைவு என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குழந்தை ஊனத்துடன்தான் பிறக்கும் என்பதற்கான மருத்துவ ஆதாரங்களை குழந்தையின் பெற்றோர் தாக்கல் செய்யவில்லை.

எனவே பெற்றோரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று தீர்ப்பளித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+