வங்கதேச தீ விபத்தில் 11 பேர் பலி-5 பேர் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்கதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
வங்கதேச தலைநகர் டாக்காவில் 5 அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இன்று காலை தீப்பிடித்தது. இதில் 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
காயமடைந்த பலரை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications