ஜெ. கொடநாட்டிலிருந்து சென்னை திரும்புவது தள்ளிவைப்பு!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து இன்று சென்னை திரும்புவதாக இருந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் கொடநாட்டுக்கு ஓய்வெடுக்க தோழி சசிகலாவுடன் சென்றிருந்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் தொடர்ந்து கடந்த நான்கு மாதங்களாக அங்கேயே தங்கியிருந்தார் ஜெயலலிதா. அங்கிருந்தபடியே அதிமுகவின் பல்வேறு போராட்டங்களை அறிவித்து, அறிக்கைகள் விடுத்து, வழி நடத்தி வரும் ஜெயலலிதா இன்று சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக பாரமவுண்ட் ஏர்வேஸ் விமானத்தில் 6 டிக்கெட்கள் புக் ஆகியிருந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் ஜெயலலிதா இன்று சென்னை திரும்பவில்லை. அவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா சென்னையை விட்டு வெளியூரில் அதிக அளவிலான காலத்திற்கு தங்கியிருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications