16ம் தேதி கூடுகிறது மதிமுக பொதுக்குழு
சென்னை: மதிமுக பொதுக்குழு 16ம் தேதி கூடுகிறது. இதில் புதிய அவைத் தலைவர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்புகளுக்கு புதியவர்கள் அறிவிக்கப்படுவர் எனத் தெரிகிறது.
செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் நடத்தி வந்த மதிமுக செல்லாது, வைகோ தலைமையிலான மதிமுகதான் உண்மையான மதிமுக என தேர்தல் ஆணையம் சமீபத்தில்தீர்ப்பளித்தது. பம்பரம் சின்னமும் வைகோ மதிமுகவுக்கே சொந்தம் எனவும் அது கூறியிருந்தது.
இந்த சூழ்நிலையில் மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 16ம் தேதி நடைபெறவுள்ளது.
எழும்பூரில் உள்ள கட்சி தலைமையகமான தாயகத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், எல்.கணேசன், செஞ்சிராமச்சந்திரன் ஆகியோரை சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கியதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் இருவரையும் எம்.பி. பதவியிலிருந்து நீக்க சபாநாயகரை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய அவைத் தலைவர் மற்றும் புதிய துணைப் பொதுச் செயலாளர்ஆகியோர் தேர்வு செய்யப்படவுள்ளனர். அவைத் தலைவர் பதவியில் இதுவரை எல்.கணேசன் இருந்தார். செஞ்சி ராமச்சந்திரன் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார்.
அவைத் தலைவராக கண்ணப்பன் நியமிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது. துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டி நிலவுகிறதாம்.












Click it and Unblock the Notifications