புலிகள் இயக்கத்தை சேர்ந்த மேலும் ஒருவர் கைது
ராமநாதபுரம்: ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்றவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
கடந்த 30ஆம் தேதி இலங்கையைச் சேர்ந்த விஜயநீதன் என்பவருடன் 3 பேரை கீழக்கரை அருகே உள்ள உப்பூர் என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட க்கி டாக்கிகள், 10 ஜிபிஎஸ் கருவிகள், பாட்டரிகள் உள்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இவற்றை இலங்கைக்கு கடத்த இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின்படி விஜயநீதனின் சகோதரரும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவரான கிருஷ்ணநீதன் என்ற நிக்சனை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். கிருஷ்ணநீதன் இலங்கை, திரிகோணமலையைச் சேர்ந்தவராவார்.
இலங்கைக்குப் பொருட்களைக் கடத்துவதற்கு இவர்களுக்கு உதவிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணநீதனையும், விஜயநீதனையும் இலங்கை போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் பயங்கர ஆயுதங்களைக் கையாள்வதில் பயிற்சி பெற்றவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications