குமரியில் கடல் உள்வாங்கியது-800 சுற்றுலா பயணிகள் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

Vivekanandar Rock
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இன்று காலை கடல் உள் வாங்கியதால், படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் விவேகானந்தர் பாறைக்குச் சென்ற 800 சுற்றுலாப் பயணிகள் கரைக்குத் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

சுனாமி தாக்குதலுக்குப் பின்னர் கன்னியாகுமரி கடல் பகுதியில் அடிக்கடி கடல் உள்வாங்குவதும், கடல் நீர் ஊருக்குள் புகுவதும் அதிகரித்து விட்டது.

இந்த நிைலயில் இன்றுகாலை திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் விவேகானந்தர் பாறைக்கு செல்லும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அந்த சமயத்தில், விவேகானந்தர் பாறைக்குச் சென்றிருந்த 800 சுற்றுலாப் பயணிகள் கரைக்கு திரும்ப முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சிறிது நேரம் கழித்து உள்வாங்கிய கடல் சகஜ நிலைக்குத் திரும்பியது. இதையடுத்து மீண்டும் படகுப் போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து விவேகானந்தர் பாறையில் சிக்கிக் கொண்ட பயணிகள் கரை திரும்பி நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+